Posts

Showing posts from June, 2024

தமிழ்க் கற்பித்தலில் இணையப் பயன்பாடு 06-06-2024

Image
  ஐந்து நாள் ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிலரங்கம்     ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத் துறையில் ஐந்து நாள் ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிலரங்கமானது தமிழ்க் கற்றல் கற்பித்தலில் மரபும் புதுமையும் என்ற தலைப்பில் துவங்கியது . தமிழாய்வுத்துறையின் இணைப்பேராசிரியர் திருமிகு . க . இம்தாதுல்லாஹ் , அவர்கள் பயிலரங்க அமைப்புச் செயலர் & ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்கள்.                    முதல் நாளில் கல்லூரிக் கூட்டமும் துறைக் கூட்டமும் நடைபெற, இரண்டாம் நாள்  06-06-2024 அன்று தமிழ்க் கற்பித்தலில் இணையப் பயன்பாடு என்ற தலைப்பில் திரு . துரை மணிகண்டன் , இணையத் தமிழ் ஆய்வாளர் . தமிழ்த்துறை . அரசு கலை & அறிவியல் கல்லூரி . நவலூர் குட்டப்பட்டு , திருச்சி . அவர்கள் உரையாற்றினார் .  அவர் தமது உரையில் தமிழ் இணைய முன்னோடிகள், இணையத்தில் எழுத்துரு உருவாக்கியவர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்தார். முதன்முதலாக 1957- ல் செயற்கைக்கோளில் ...

சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா- கவியரங்கம் 12 - புன்னகை

06/06/24 மாலை.6.00 மணியளவில் சங்கத்தமிழ் இலக்கிய பூங்காவில் கவியரங்கம் 12 புன்னகை என்னும் தலைப்பில் குவியம் வழியாக சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் -----------------------  01.எழிலரசி தலைமை ஆசிரியர் மன்னச்சநல்லூர்.  02.பத்மினி ஈரோடு.  03.மீனாட்சி மதுரை.  04.மாலதி.  05 .உதவிப் பேராசிரியர் நி.அமிருதீன் திருச்சி -20.  06.நிர்மலா தேவி.  07.தி மீரா ஈரோடு.  08.கனகலட்சுமி சீனிவாசன் கரூர்.  09.ஆனந்தி தூத்துக்குடி.  10.ராதிகா ராமலிங்கம்.  11.அனுசியா.  12.விஷாலி.  13.து. பவானி திருவள்ளூர்.  14.தமிழ் மாமனி நீலகண்ட தமிழன் சென்னை.  இதில் நான் வாசித்த கவிதை.....    புன்னகை   நாளை புன்னகை குறித்த கவியரங்கமாம்!!!!  என்ன கவி பாடுவது ?  சிந்தித்தவாறே கண்ணயர்ந்தேன்.  கனவில் புன்னகையே  பெண் உருவாய் வந்தாள்.  உனக்குப் புன்னகை தானே வேண்டும்..  என்விரல் பிடித்து வா என்றுரைத்து  காற்றில் மிதந்து சென்றாள்.  தாயின் குரல் க...

கல்விப் பணியில் கலைஞர் - கருத்தரங்கு 03-06-2024

Image
இந்திய கல்விசார் ஆய்வாளர்கள் அமைப்பின் தமிழாய்வுச் சங்கமம் மூலம் கலைஞர் 100 எனும் தலைப்பில் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் ஜூன் மாதம் 03 ம் தேதி மாலை 5. 30 மணிக்கு நடைபெற்றது. கருத்தரங்கில் கல்விப் பணியில் கலைஞர் எனும் தலைப்பில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் நவரசம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஐ. செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்விப் பணியில் கலைஞர் ஆற்றிய பல்வேறு சேவைகளையும் இலக்கியத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் பல்வேறு விதமான பங்கெடுப்புகளையும் பங்களிப்புகளையும் சிறப்பாக மொழிந்தார்.இக்கருத்தரங்கில் நான் கலந்து கொண்டதால் கலைஞர் குறித்த பல்வேறு புதிய செய்திகளை அறிந்து கொண்டேன் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி.